அன்புக்குக் கட்டுப்படாத உயிர்களே இல்லை. அம்மாவின் கருவறை நீங்கிக் கண்திறந்த காலந்தொட்டு எதிர்ப்படுகிற எல்லாவற்றிலும் அன்பையே தேடுகிறது மனித மனது. இதற்கு ஐந்தறிவு உயிரினங்களும் விதிவிலக்கல்ல.
அம்மா, அப்பா, கணவன் மனைவி, காதலன் காதலி, அண்ணன் தம்பி, பெற்றோர் பிள்ளைகள், மற்றும் இவை எல்லாமாயும் முகங்காட்டக்கூடிய நட்புக்கள் என்று ஒவ்வொருவருக்கிடையிலும் பகிர்ந்துகொள்ளப்படும் உறவுப்பிணைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை.
அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சிரிக்கவைக்கிற, சிந்திக்கவைக்கிற, தவிக்க வைக்கிற, தடுமாறவைக்கிற, ஏங்கவைக்கிற, இளகவைக்கிற, உருகவைக்கிற, உள்ளத்தைக் கொள்ளைகொள்ளவைக்கிற சில உறவுப் பகிர்வுகள் இங்கே.