என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு வணக்கம்!
என் அன்பு தந்தை திரு பொ.கணபதி அவர்களின் மறைவு என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. மரணம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் என்றாலும் என்னால் தாங்கவே முடியவில்லை. மீள முடியாத வேதனையிலிருந்து என்னை மீண்டும் மீட்டெடுத்தது எனது எழுதுகோல் தான்.
காதல் முத்தம் தருவாயா? கதை வித்தியாசமான படைப்பு. இக்கால பெண்கள் பெற்றோரிடம் எதையுமே மறைக்கக்கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லாவிட்டால் இக்கதையின் நாயகி வண்ணக்கிளி மாதிரி தத்தளிக்க வேண்டியது தான்.
மரகதப் பொன் வீணையான தன் மனைவி வண்ணக்கிளியை சந்தேகம் கொண்டு புழுதியில் வீசிய முகிலன் மறுபடியும் காதல் இசையை மீட்டினானா?
வாசித்து பாருங்கள்
மகேஷ்வரன்.