பத்திரிக்கை ரிப்போர்ட்டரான அனிதா, ஜெயில் கைதிகளில் பெண் கைதிகளைச் சந்தித்து அவர்களிடம் ஒரு நேர் காணல் நிகழ்த்தி அதை தன் பத்திரிக்கையில் வெளியிட வேண்டி ஜெயிலுக்குள் வருகிறாள்.
ஜோதிமணி என்னும் கொலைக் குற்றவாளியை சந்தித்துப் பேசும் போது, ஒரு அதிர்ச்சியான விஷயம் வெளியே வருகிறது. "நான் கொலையே செய்யலைங்க...கொலை செய்தது...என் புருஷன்..." என்கிறாள்.
கோர்ட்டில் தான்தான் கொலை செய்ததாய், அவள் ஒப்புக் கொண்டதைக் குறிப்பிட்டுக் கேட்டாள் அனிதா. "நான் உள்ளார வந்திட்டா... எந்தப் பிரச்சினையுமில்லைங்க...என் புருஷன் வந்தா... ரெண்டு பெண் குழந்தைகளையும் வெச்சிட்டு...நான் தனியா பொழைக்க முடியாது பாருங்க?... அதான் ரெண்டு குழந்தைகளையும் அவர் கைல ஒப்படைச்சிட்டு...நான் இங்க வந்திட்டேன்" என்றவள் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறாள்,
"வெளிய இருக்கற என் புருஷன் என் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்?னு தெரியலை...அதைப் போய்ப் பார்த்திட்டு, எனக்கு வந்து தகவல் சொல்ல முடியுங்களா?" அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவள் சொன்ன ஊருக்குச் சென்று அவள் கணவனைப் பார்த்த அனிதா அதிர்ச்சியடைகிறாள்.
அவளை அதிர வைத்தது என்ன? ஜோதி மணியின் கணவர் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கின்றாரா...? போன்ற கேள்விகளுக்கான விடையை நாவலின் அழகான எழுதியுள்ளார் கதாசிரியர். விறுவிறுப்பாகச் செல்லும் இந்த நாவல் நிச்சயம் வாசகர்களைக் கவரும்.