கள்வனின் காதலி ஒரு காதல் காவியம். இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட கால கட்டத்தில் பூங்குளம் என்னும் சிறிய கிராமத்தில் முத்தையனும் கல்யாணியும் காதலர்கள் விதி இவர்களது வாழ்விலும் விளையாடியது. முத்தையனை எல்லோரும் பயப்படும் ஒரு கொள்ளையனாக மாற்றியது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைய நேர்ந்தபோது அங்கும் விதி சிரித்தது!...அதன் முடிவு...?
(இந்த நாவல் ஒரு வெற்றிகரமான திரைப்படமாக 1955ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பானுமதி நடித்து வெளியாகியது)