சேது கால்வாய்த் திட்டம் பற்றி, 6-10-2007 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
அன்பார்ந்த தோழர்களே! இன்று சேது கால்வாய்த் திட்டம் என்னும் இராமர் பாலம் என்ற செய்தி குறித்து பேசப்போகிறோம். இந்த பிரச்சினை ஏன் வந்தது என்று உங்களுக்கு தெரியும். பல காலமாக இந்த செய்தி பற்றிய அரசல்புரசலாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் கூட இந்த பிரச்சினை எப்போது முன்னுக்கு வந்தது என்றால், 2002 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற வைஷ்ணவா நியூஸ் நெட் ஒர்க் என்ற இந்துத்துவவாதிகளின் இணைய தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.