மனிதர்களை அடையாளப்படுத்தவே பெயர் சூட்டும் வழக்கம் வந்தது. உடை, உணவு, வழிபாடு, வாழ்க்கை முறைகளில் திணிக்கப்பட்ட சாதிய அடையாளங்கள் பெயர்களையும் விட்டு வைக்கவில்லை. பொருள் புரியாமல் இழிவான பெயர்களை சூட்டிக் கொள்வதில் பெருமை பெற்றான் தமிழன். இந்தப் பெயர் சூட்டலிலும் பண்பாட்டுப் புரட்சியை தொடங்கி வைத்தார் பெரியார்; மொழித்தூய்மையை விட முதன்மையானது இழிவு ஒழிப்பு என்ற சமூகப் பார்வையோடு பெரியார் - பார்ப்பன எதிர்ப்பாளர்களையும், இனத்துக்கு தொண்டாற்றியவர்களையும் பெயர்களாகச் சூட்டினார்.
அப்படி பெயருக்குப் பின்னால் மறைந்து நிற்கும் சமூக அடையாளங்களை விளக்கி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய சிறப்பான உரையே, இந்த நூல்.