ஒரு அரசியல்வாதியின் ஊழல் பணத்தை குறிவைத்து 'ஆப்ரேஷன் ஆக்டோபஸ்' என்னும் ரகசிய ஆப்ரேஷனில் இளம் வருமானவரி அதிகாரிகளான சாதுர்யா மற்றும் நித்திலன் களம் இறங்குகிறார்கள்.
ஆனால்,
எதிர்பாரா திசைகளிலிருந்து அதே பணத்திற்காக பலர் முயற்சிக்கிறார்கள். இந்த போராட்டத்தில் துரத்தல்,துரோகம், சங்கிலி தொடர் கொலைகள், சிபிஐ அதிகாரிகளையும் மற்றும் வருமானவரி அதிகாரிகளையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
இந்த பந்தயத்தில், யார் யார் உள்ளனர், யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என யூகிக்கமுடியாத பல்வேறு கோணங்களில் விறுவிறுப்பாக கதையை நகர்த்துகிறார் க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார், அவருக்கே உரிய பாணியில்.
இதில் வரும் திருப்பங்கள் இருக்கையின் விளிம்பில் உட்கார வைக்கும்.