சாதாரண கிராமத்தில் பிறந்து, சட்டக்கல்லூரியில் பயின்று, தன்னை ஒரு சிறந்த ஜூனியர் வக்கீல் நிலைக்கு உயர்த்திக் கொள்கிறான் குமரேஷ் என்ற இளைஞன். ஒரு கட்டத்தில், குமரேஷின் சீனியர் கோகுல் வெளிநாடு சென்றிருக்க, அனந்தவர்மன் என்ற தொழிலதிபரின் வழக்கில் குமரேஷ் சிறப்பாக வாதாடி, வர்மனின் நன்மதிப்பைப் பெறுகிறான்.
கோகுலும், வர்மனும் ஏற்கனவே சிறந்த நண்பர்களாக இருக்க, இப்போது குமரேஷும் அவர்களின் கூட்டணியில்..!
வர்மனின் மகள், வெளிநாட்டில் படித்த மாடர்ன் மாயக்காரி சரணிகா, குமரேஷின் மீது காதல் மயக்கம் கொள்கிறாள்.
சட்டம் படித்த இளைஞனும், மாடர்ன் மாயக்காரியும் வாழ்க்கையில் இணைந்தார்களா?
அத்தியாயம் டு அத்தியாயம் காதல் சொட்டும் வசீகரக் கதைக்குள் செல்வோம்.