அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் அறுபது வயது கடந்த மூதாட்டியை தன் பாட்டி என்றதோடு மட்டுமல்லாமல் 'உங்க ரீடர்' என்றும் அறிமுகப்படுத்திய போது ஆச்சரியமாய் இருந்தது.
அதைவிட ஆச்சரியம் அவர்கள் கீழ்கண்டவாறு சொன்னது.
"உங்க கதைகளில் பரத்-சுசிலா வர்ற கதைகள் அதிகமா பிடிக்கும். ஒரு எல்லையைத் தாண்டாம கவர்ச்சியா எழுதறிங்க."
பரத் - சுசிலாவுக்கு அறுபது வயது தாண்டிய ரசிகர்கள் இருப்பார்கள் என்று நான் அதுவரை நினைத்ததே இல்லை.
- பட்டுக்கோட்டை பிரபாகர்