Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

Kathi Kappal

ebook

என் இனிய வாசகர்களே! வணக்கம்,பட்டுக்கோட்டை பிரபாகருக்கு நாளும் வாசகர்கள் பெருகி வருகிறார்கள். அவரும் வாசகர்களின் ரசனைக் கேற்ப விதவிதமாய் எழுதுகிறார். இதற்கு அடிப்படை காரணம் ஒன்று உண்டு, அந்த உண்மையை அவரே விளக்குகிறார்."ஒரு சமயம் நான் நண்பர்களுடன் திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோயிலை சுற்றிப் பார்க்கச் சென்றேன் அந்த கோயிலை சுற்றி காண்பிப்பதற்கென அங்கே ஒரு 'கெய்டு' இருந்தான். அவனது உடையும், உடலும் அவன் ஒரு சரியான ஏழை என்பதற்கு சாட்சி சொல்லின. எங்களுக்கு அவன் ஓவ்வொரு இடமாக சுற்றி காண்பித்துக் கொண்டு வரும் பொழுது... எங்கிருந்தோ ஒரு சின்னச்சிறுமி ஓடி வந்தாள். வந்து "அப்பா.... அப்பா பத்து காசு கொடு ஐஸ் வாங்கணும். அம்மா பணம் கேட்டு சொல்லி அனுப்பிச்சாங்க." என்றாள் பரபரப்பாக உடனே அவன்..."சரிசரி! நீ போ இதோ வர்றேன்" என்று அவளை விரட்டி விட்டு தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்தான். 'சே பத்து பைசா கூட இல்லாம இருக்கிறானே பாவம்', என்று பரிதாபப்பட்டேன். சிறிது நேரத்திற்குள் மீண்டும் மீண்டும் அந்தச் சிறுமி ஓடி வந்து அம்மா பணம் கேட்பதாகச் சொன்னாள். அவனும் மறுபடி மறுபடி கத்தினான்.கடைசியில் எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்த பிறகு, நாங்கள் விடைபெறும் சமயத்தில் அவனிடம் இரண்டு ரூபாயை எடுத்து நீட்டினேன். அவன் பணத்தை வாங்கும் சமயம் பார்த்து ஓடோடி வந்த அந்த சிறுமி... "அப்பா அப்பா... அம்மா பணம் கேட்டாங்க" என்றதும் அவளை எரித்து விடுவதைப் போல முறைத்து விட்டு "இதோ, வர்றேன்னு போய் சொல்லு" என்று அலட்சியமாக சொல்லியவன், அந்த சிறுமி வேதனையுடன் நடந்து போகும் திசைக்கு நேர் எதிராக நடந்து அருகில் இருந்த ஒரு லாட்டரி சீட்டுக்கடையில் இரண்டு ரூபாயையும் கொடுத்து இரண்டு சீட்டுகளை வாங்கி பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான். அந்த காட்சியை பார்த்த நிமிஷத்தில் மனசில் எனக்கு 'பகீர்' என்று தீ பரவியது. அந்த நிகழ்ச்சியை வைத்து தான் உடனே 'இந்தியனாய் இரு. இந்தியாவை வாங்கு' என்ற கதையை எழுதினேன். பெரும்பாலும் எனக்கு உண்மை சம்பவங்களை வைத்து கதை எழுதுவது தான் பிடிக்கும்." என்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். அவர் எழுத்தின் உண்மை ரகசியம் புரிகிறதல்லவா உங்களுக்கு.


Expand title description text
Publisher: Pustaka Digital Media

Kindle Book

  • Release date: August 27, 2020

OverDrive Read

  • Release date: August 27, 2020

EPUB ebook

  • File size: 126 KB
  • Release date: August 27, 2020

Formats

Kindle Book
OverDrive Read
EPUB ebook

subjects

Fiction Thriller

Languages

Tamil

என் இனிய வாசகர்களே! வணக்கம்,பட்டுக்கோட்டை பிரபாகருக்கு நாளும் வாசகர்கள் பெருகி வருகிறார்கள். அவரும் வாசகர்களின் ரசனைக் கேற்ப விதவிதமாய் எழுதுகிறார். இதற்கு அடிப்படை காரணம் ஒன்று உண்டு, அந்த உண்மையை அவரே விளக்குகிறார்."ஒரு சமயம் நான் நண்பர்களுடன் திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோயிலை சுற்றிப் பார்க்கச் சென்றேன் அந்த கோயிலை சுற்றி காண்பிப்பதற்கென அங்கே ஒரு 'கெய்டு' இருந்தான். அவனது உடையும், உடலும் அவன் ஒரு சரியான ஏழை என்பதற்கு சாட்சி சொல்லின. எங்களுக்கு அவன் ஓவ்வொரு இடமாக சுற்றி காண்பித்துக் கொண்டு வரும் பொழுது... எங்கிருந்தோ ஒரு சின்னச்சிறுமி ஓடி வந்தாள். வந்து "அப்பா.... அப்பா பத்து காசு கொடு ஐஸ் வாங்கணும். அம்மா பணம் கேட்டு சொல்லி அனுப்பிச்சாங்க." என்றாள் பரபரப்பாக உடனே அவன்..."சரிசரி! நீ போ இதோ வர்றேன்" என்று அவளை விரட்டி விட்டு தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்தான். 'சே பத்து பைசா கூட இல்லாம இருக்கிறானே பாவம்', என்று பரிதாபப்பட்டேன். சிறிது நேரத்திற்குள் மீண்டும் மீண்டும் அந்தச் சிறுமி ஓடி வந்து அம்மா பணம் கேட்பதாகச் சொன்னாள். அவனும் மறுபடி மறுபடி கத்தினான்.கடைசியில் எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்த பிறகு, நாங்கள் விடைபெறும் சமயத்தில் அவனிடம் இரண்டு ரூபாயை எடுத்து நீட்டினேன். அவன் பணத்தை வாங்கும் சமயம் பார்த்து ஓடோடி வந்த அந்த சிறுமி... "அப்பா அப்பா... அம்மா பணம் கேட்டாங்க" என்றதும் அவளை எரித்து விடுவதைப் போல முறைத்து விட்டு "இதோ, வர்றேன்னு போய் சொல்லு" என்று அலட்சியமாக சொல்லியவன், அந்த சிறுமி வேதனையுடன் நடந்து போகும் திசைக்கு நேர் எதிராக நடந்து அருகில் இருந்த ஒரு லாட்டரி சீட்டுக்கடையில் இரண்டு ரூபாயையும் கொடுத்து இரண்டு சீட்டுகளை வாங்கி பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான். அந்த காட்சியை பார்த்த நிமிஷத்தில் மனசில் எனக்கு 'பகீர்' என்று தீ பரவியது. அந்த நிகழ்ச்சியை வைத்து தான் உடனே 'இந்தியனாய் இரு. இந்தியாவை வாங்கு' என்ற கதையை எழுதினேன். பெரும்பாலும் எனக்கு உண்மை சம்பவங்களை வைத்து கதை எழுதுவது தான் பிடிக்கும்." என்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். அவர் எழுத்தின் உண்மை ரகசியம் புரிகிறதல்லவா உங்களுக்கு.


Expand title description text