அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இந்தியக் குடும்பம் பற்றியக் கதை.
கதையின் நாயகி மீரா...!
அற்புதமான கதாபாத்திரம். அமெரிக்காவில் பிறந்து இருந்து அதனோடு ஒன்றிப்போன பெண் இந்திய மண்ணில் ஒட்டி உறவாடுவதில் ஏற்படும் அந்நியத்தன்மை;
இடையில் வானவில் போல் வரும் வசந்தம்.
ஹரி…
மீராவுக்கு உற்ற தோழனாய் வரும் பாத்திரம்...
மீராவின் குடும்ப உறவுகள்...அவள் படிக்கும் வகுப்பறைத் தோழிகள்… அவர்களுடன் ஏற்படும் கருத்து வேற்றுமைகள் என நாவல் முழுதும் வரும் மனத்தைத் தொடும் கதாபாத்திரங்கள்...என 'காதலெனும் வானவில்’ நம் கருத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் வாஸந்தி அவர்களால் சிறப்பாக சித்திரிக்கப்பட்டுள்ள சமூக நவீனம்.
நாவலைப் படித்து முடித்ததும் மனதில் ஏற்படும் ஓர் நிறைவு வாசகர்களை மகிழ்ச்சியும், நிறைவையும் அடையச் செய்யும் என்பது உறுதி.