இவ்வுலகில் யாரும் அனாதையாக பிறப்பதில்லை காலச் சூழ்நிலையால் சிலபேர் அனாதைகளாக ஆக்கப்படுகிறார்கள்.
தனக்கென்று உறவுகள் யாரும் இல்லாத நிலையில் உலக வாழ்க்கையை வெறுக்கும் ஒருவனுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லித் தருகிறார் பெரியவர் ஒருவர்...
அவர் மூலம் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ஏக்கங்கள், ஆசைகள் இவற்றையெல்லாம் பாசமும் காதலும் கலந்து... எடுத்து சொல்லப்பட்ட கதை தான் 'காலத்தை வென்றவன் நீ'
இக்கதையின் கதாநாயகன் நிச்சயம் எல்லாருடைய மனதிலும் நிறைந்து இருப்பான் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்