ஒரு பெண்ணுக்கு கடவுள் இரண்டு தாயை கொடுத்திருக்கிறான். பிறந்தவீடு மட்டுமில்லை. புகுந்த வீடும் ஒரு பெண்ணுக்கு தாய் வீடு தான்.
கதையின் நாயகி போராட்டமான வாழ்க்கையை சந்திக்கிறாள். அவள் வாழ்க்கையில் ஜெயித்தாளா... மாமியாரை தாயாக எண்ணி அன்பு செலுத்திய அந்த மகளுக்கு, மாமியார் செய்த கைம்மாறு என்ன என்பதை 'காத்திருக்கும் பூமாலை' என்ற நாவலில் மனதை தொடும் வகையில் எழுதியுள்ளேன். படியுங்கள். ரசியுங்கள்.
- பரிமளா ராஜேந்திரன்