குடும்ப தலைவன் தான் ஒரு குடும்பத்திற்கு தூண். அவரது செயல்கள் தான் குழந்தைகளுக்கு நன்மையையும் தீமையையும் அளிக்கிறது. அப்படிப்பட்ட தலைவன் தடம்புரண்டால் அவர்களது மொத்த வாழ்க்கையும் தடம் மாறி விடுகிறது.
'கல்லில் வடித்த கவிதை' நாவலில் இரு மாறுபட்ட குணங்களை கொண்ட இரு தந்தையால், அவர்களது குழந்தைகள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும், அதனால் அவர்களது வாழ்க்கை எப்படிப்பட்ட பிரச்சனைக்குள்ளாகிறது என்பதையும், அதை கணவன் மனைவியாக இருந்து, அவர்கள் எவ்வாறு தீர்த்து, பின் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்பதை சுவாரசியமும் காதலும் இணைந்து ஜெய்சக்தி எழுதியுள்ளார்.