இளம் தொழிலதிபர் சூரியா.
கல்லூரி நடனம் போட்டியில் நடுவராக செல்கிறான்.
அழகுமிகு ஆராதனா என்ற மாணவிக்கு காலேஜ்குயின் கிரீடத்தை சூட்டுகிறான். ஆராதனாவிடம் மனதைப்பறிக் கொடுக்கிறான். ஆராதனாவின் புகைப்படத்தை தன் தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புகிறான்.
சூரியாவின் தந்தை ஆராதனாவைப் பார்த்து அதிர்கிறார். காரணமென்ன...?
கொடைக்கானலில் வசிக்கும் சோழஸ்வரி மேகலா...
இருபது வருடங்களுக்கு முன்பு அனாதை ஆசிரமத்தில் விட்ட தன் குழந்தையைத் தேடி தஞ்சைக்கு வருகிறாள்.
மேகலாவின் மகள்தான் ஆராதனா...
சூரியாவின் அத்தை மகள்தான் ஆராதனா...
மேகலாவும் ஆராதனாவும் ஒன்று சேர்ந்தார்களா?
சூரியாவின் காதல் ஆராதனாவிற்கு புரிந்ததா...?
விடை சொல்லும் கதைதான்... இந்த நாவல்