இக்காலத்தில் சில பெண்கள் சினிமாவில் வரும் ஹீரோ போல ஒருவன் வந்து தன் அழகை ரசித்து தனக்கு சேவகனாக இருந்து தன்னை சந்தோஷ கடலில் நீந்த வைப்பான் என்று கனவு காண்கிறார்கள்.
ஆனால் நிஜத்தில் அப்படி அமைவதில்லை. அதை ஏற்க மறுக்கும் மனம் அவனை தள்ளி வைத்துப் பார்க்கிறது.
விளைவு உறவில் விரிசல்.
கதையின் நாயகி இப்படி குணம் உள்ளவள்... விவகாரத்துக்குப் பின் சந்திக்கும் கதாநாயகன் கதாநாயகி நிலை...
கதாநாயகனுக்கு கிடைத்த இன்னொரு வாழ்க்கை... இதையெல்லாம் எப்படி எதிர்கொண்டாள் என்பதை கவிதை நயம் கலந்து காதல் ஏக்கங்களுடன் சொல்லப்பட்ட கதைதான் கவிதை அரங்கேறும் நேரம் நிச்சயம் இந்த கவிதை உங்கள் மனதிலும் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்