உலகில் படைக்கப்படும் பெண்கள் எல்லோரும் ஊர்வசி மேனகை ரம்பைகளாக படைக்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு 'அழகு'தான் முக்கியம் என நினைப்பது முட்டாள்தனம். அன்பான மனமும் அறிவார்ந்த எண்ணமும் அவளை வாழ்க்கையில் நிச்சயம் தலைநிமிரச் செய்யும்.
அழகே பெரிதென நினைக்கும் கணவன் அமைந்ததால் கதையின் நாயகி அனுபவிக்கும் இன்னல்கள்... அதிலிருந்து அவள் மீண்டாளா என்பதை விவரிக்கும் நாவல்தான் 'மனமே அழகு' குடும்ப நாவலாக எழுதப்பட்ட இக்கதை வாசகர்கள் உள்ளங்களை கவரும் என மனமார நம்புகிறேன்.
- பரிமளா ராஜேந்திரன்