வேலை தேடி சென்னைக்கு செல்லும் ஒளிக்கொடி, காரில் அடிபட்டு உயிரற்ற சடலமாக கிடக்கும் இளைஞன் ஒருவனை பார்க்கிறாள்.
சில நாட்கள் கழித்து நீல மாளிகை என்னும் ஓட்டலில் வேலை பார்க்கும் ஒளிக்கொடி, மீண்டும் அந்த இளைஞனை சந்திக்கிறாள்.
அப்படியானால் இறந்து போன மனிதன் யார்?
அவன் எவ்வாறு மீண்டு வந்தான்?
கதையின் மர்மம் என்ன?
ஒளிக்கொடிக்கும், ஓட்டல் நீலமாளிகைக்கும், அந்த இளைஞனுக்கும் என்ன சம்மந்தம்? என்பதை கதைக்குள் படிப்போம்.