அழகும் எழிலும் மிகுந்த நடிகையான வந்தனாவை, அழகிலும் அறிவிலும் பெரிதாக ஜொலிக்காத தன் நண்பன் மாரிமுத்து மணமுடித்ததன் பின்னணியில் இருப்பவர் குமாரசுவாமி என்னும் சித்தர் என்று அறிந்து பிரமிப்பு அடைகிறான் வசந்தன்.
ஏழ்மையான குடும்பப் பின்னணி திருமணத்திற்கு காத்திருக்கும் சகோதரிகளுடன் தன் திருமணம் நிச்சயமான நிலையில் தான் பணிபுரியும் அலுவலகத்தில் சந்திக்கும் இன்னல்கள் உடன் விரக்தியின் உச்சியில் இருக்கும் வசந்தனுக்கு குமாரசுவாமி சித்தர் உதவினாரா...?
அஷ்டமா சித்துகளில் ஒன்றான வசியம் என்பது உண்மைதானா...? வசந்தன் வாழ்வில் மறுமலர்ச்சி கண்டாரா... இந்திரா செளந்திர்ராஜனின் பரபரப்பான நடையில் படியுங்கள்.