சிறுவயதிலிருந்தே தாழ்வு மனப்பான்மையோடு ரஞ்சனி வளர்கின்றாள். இவளுக்கு முன்னரே தங்கைக்கு மணம் முடிக்கச் சூழல் வருகிறது.
தந்தையோ மூத்த மகளுக்கும் நல்ல வழி பிறக்க வேண்டி, ஒரு பையனை மணமுடிக்க அவசரமாகத் தேர்வு செய்கிறார். ஆனால் அந்தப் பையன் ரஞ்சனியிடம் ரகசியமாய் ஒரு கோரிக்கை வைக்கின்றான்.
எதிர்காலமே கேள்விக் குறியான நேரத்தில் தந்தையின் நண்பர் மகனும் தன் பள்ளிக் கால பால்ய தோழனுமான குணா இவள் வாழ்வில் வருகிறான். ரஞ்சனியின் இருண்ட வாழ்வு அகல்விளக்கு போலச் சுடர் விட, குணா என்ன செய்தான்? ரஞ்சனியின் எதிர்காலம் என்ன ஆனது? என்பதைப் படித்துப் பாருங்கள். (இது நான் எழுதிய முதல் நாவல்.)