மகா பாரதமே கர்ம வினையைப் போதிக்கும் இதிகாசம். நடந்த எதுவும் நம்மால் நடக்கவில்லை. அவரவர் கர்ம வினைப்படியே என்று ஒவ்வொருவரின் முன் வினையைக் குறிக்கிறது மாயப் பொய்கை.
பீஷ்மர். அஷ்ட வசுக்களில் ஒருவர்,அவரை அழிக்கப் பிறந்த வராங்கி என்பவளே அம்பை. 16 வருஷமே வாழ்வேன் என்று சத்தியம் செய்து பூமிக்கு வந்த சோமனின் மகன் அபிமன்யு என்று அவர்களின் முற்பிறவி பற்றிக் கூறுகிறது மாயப் பொய்கை.