ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது, குணமும், ஒழுக்கமும் அவசியம் என்று பதிவு செய்த நாவல் தான், "மெல்லிய பூங்காற்றே" கதாநாயகியாக வாணி, நாயகனாக சத்யமோஹன். உறவுகளுக்கு முக்கியத்துவம் அள்ளிப்பவனாக மோகன், உண்மையான அன்புக்கு ஏங்குபவளாக வாணி, இவர்களுக்கு இடையே மோகனின் குழந்தையாக, சோனா என்கிற காவியா.
ஒரு நாவல் குடும்ப கதையாகவும் இருந்து, எதிர்பாராத திருப்பதுடன் இருந்தால், நிச்சயம் வாசித்து முடிக்க தூண்டும் என்பது உண்மையாகிறது. ஒரு குடும்பத்தின் சகோதர, சகோதரிகளின் பாசம் தலைமுறை தாண்டி அழுத்தமாய் நாவல் ஆசிரியர் கூறி இருப்பது இக்காலத்துக்கும் அறிவுறுத்தப்பட வேண்டிய ஓன்று இதை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு நேர்மறை பாதிப்பை மனதில் உருவாக்கும் என்பதில் துளியும் ஐயம்மில்லை.'